states

img

ஆந்திராவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி  

ஆந்திராவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் முலகலேடு கிராமத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் ஜானி பாய். இவர் தனது வீட்டில் அவருடைய மகன் தாடு, மருமகள் சர்புனி, பேரன் பெரோஸ் ஆகியோருடன் வழக்கம்போல் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தின் தாக்கத்தால் வீடு முற்றிலும் சேதமடைந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அருகிலிருந்த வீடுகளும் சேதமடைந்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

மேலும் சிலிண்டர் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

;